Testo Yaaro Yaaro - Karthik
Testo della canzone Yaaro Yaaro (Karthik), tratta dall'album Maattrraan (Original Motion Picture Soundtrack)
யாரோ-யாரோ, நான் யாரோ?
உன்னைவிட்டு நான் வேறோ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ?
காற்றே-காற்றே சொல்வாயோ?
காலம் தாண்டிச் செல்வாயோ?
கண்ணீர்விட்டு கரையும் என்னை காப்பாயோ?
இது கனவா-கனவா?
இல்லை நெனவா-நெனவா?
இது கனவாய் இருந்தால் கலைந்தே போகும், போகட்டும்
இது நிழலா-நிழலா?
இல்லை ஒளியா-ஒளியா?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்
ஹோ, யாரோ-யாரோ, நான் யாரோ?
உன்னைவிட்டு நான் வேறோ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ?
முதல்முறை இங்கு நீயின்றி நடக்கிறேன் தனியாக
இருந்தும் ஏன் உன் மூச்சுக்காற்றை உணர்கிறேன் இதமாக?
சரிபாதியில் இரவும் பகலும் என கூறியே உலகம் சுழலும்
ஒரு பாதியும் பிரிந்தே போனால் என்னாகும்?
நினைவால் இனி நான் வாழ
நதிபோல் இனி நாள் போக
எதனால் இனி ஆறும், மாறும் என் காயம்?
யாரோ-யாரோ, நான் யாரோ?
உன்னைவிட்டு நான் வேறோ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ?
கனாக்களில் வரும் பெண் பிம்பம் திகைக்கிறேன் யாரென்று
முகத்திரை, அதை தள்ளி பார்த்தால் முறைக்கிறாய் நீ நின்று
கனகாம்பர இதழை விரித்து, குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
திரும்பாமலே நடந்தால், சென்றால் எது மிஞ்சும்?
நிறமாலையை போல் நெஞ்சம்
நெளிந்தாடிடும் பல வண்ணம்
உனை பார்த்ததும் பாராதது போல் சிறு வஞ்சம்
உனை பார்த்ததும் பாராதது போல் சிறு வஞ்சம்
யாரோ-யாரோ, நான் யாரோ?
உன்னைவிட்டு நான் வேறோ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ?
காற்றே-காற்றே சொல்வாயோ?
காலம் தாண்டிச் செல்வாயோ?
கண்ணீர்விட்டு கரையும் என்னை காப்பாயோ?
இது கனவா-கனவா?
இல்லை நெனவா-நெனவா?
இது கனவாய் இருந்தால் கலைந்தே போகும், போகட்டும்
இது நிழலா-நிழலா?
இல்லை ஒளியா-ஒளியா?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்
Credits
Writer(s): Jayaraj J Harris, Thamarai Subramanian
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.