Testo Nenjam Orumurai - Mahalakshmi Iyer feat. Srinivas
Testo della canzone Nenjam Orumurai (Mahalakshmi Iyer feat. Srinivas), tratta dall'album Vaseegara
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குத்தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது
நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்
நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்
கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்
உன் முத்தம்தானே பற்றி கொண்ட முதல் தீ
கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ
உன் பார்வைதானே எந்தன் நெஞ்சில் முதல் சலணம்
அன்பே என்றும் நீ அல்லவா
கண்ணால் பேசும் முதல் கவிதை
காலமுள்ள காலம் வரை
நீதான் எந்தன் முதல் குழந்தை
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறுமுறை பார் என்றது
காதல் என்றால் அது பூவின் வடிவம்
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்
காதல் வந்தால் இந்த பூமி நழுவும்
பத்தாம் கிரகம் ஒன்று பாகம் பறவும்
காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்
ஒரு தற்பவெப்ப மாற்றங்களும் நிகழும்
காதல் வந்து கண்ணை தொட்டு எழுப்பும்
அது ஊசி ஒன்னை உள்ளுக்குள்ளே அனுப்பும்
இந்த காதல் வந்தால் இலை கூட மலை சுமக்கும்
காதல் என்ற வார்த்தையிலே
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்
காதல் என்ற காற்றினிலே
தூசி போல நாம் அலைவோம்
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறுமுறை பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குத்தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது
Credits
Writer(s): B. Vijay, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.