Testo En Jeevan Paduthu - S. Janaki
Testo della canzone En Jeevan Paduthu (S. Janaki), tratta dall'album Neethana Antha Kuyil (Original Motion Picture Soundtrack)
ஆ-ஆ
ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-அ
என் ஜீவன் பாடுது உன்னைத் தான் தேடுது
என் ஜீவன் பாடுது உன்னைத் தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி
என் ஜீவன் பாடுது உன்னைத் தான் தேடுது
என் ஜீவன் பாடுது உன்னைத் தான் தேடுது
கண்ணோடு மலர்ந்த காதல்
நெஞ்சோடு வளர்ந்த சொந்தம்
எல்லாமே கனவு போலே ஆனதே
ஒன்றோடு ஒன்று சேரும் உல்லாசம் வாழ்வில் கூடும்
என்றே நான் நினைத்த உண்மை போனதே
கல்யாண சேலை மாறும் முன் மறைந்ததே
கண்ணீரில் பேதை வாழ்க்கையும் கரைந்ததே
எந்நாளும் இந்த வஞ்சம் மாறுமா
ஆ-ஆ-ஆ
என் ஜீவன் பாடுது உன்னைத் தான் தேடுது
என் ஜீவன் பாடுது உன்னைத் தான் தேடுது
நெஞ்சத்தை திறந்து வைத்தேன்
மஞ்சத்தை விரித்து வைத்தேன்
மன்னாதி மன்னன் திரும்பி வரவில்லை
முல்லை பூ சூடி நின்றேன்
முத்தாட ஏங்கி நின்றேன்
கொண்டாட ஆசை இருந்தும் விடவில்லை
என் ஜீவன் போன பாதையில் போகிறேன்
என் நெஞ்சில் போகும் கேள்வியை கேட்கிறேன்
சொல்லாமல் இந்த வஞ்சம் தீர்க்கிறேன்
ஆ-ஆ-ஆ
என் ஜீவன் பாடுது உன்னைத் தான் தேடுது
என் ஜீவன் பாடுது உன்னைத் தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி
என் ஜீவன் பாடுது உன்னைத் தான் தேடுது
என் ஜீவன் பாடுது உன்னைத் தான் தேடுது
ஆ-ஆ
ஆ-ஆ
ஆ-ஆ-ஆ
Credits
Writer(s): Kabilan Vairamuthu, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.